Thursday, 12 January 2023

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை

29 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறத் தவறியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அக்குரஸ்ஸவிலுள்ள தனது இல்லத்தில் கடிதம் ஒன்றை விட்டுவிட்டு, பெற்றோருக்கு உதவ முடியாமல் போனதில் வருந்திய அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் உறவினர்கள் அவரை அக்குரஸ்ஸ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கொரிய மொழிப் பரீட்சையில் 5 புள்ளிகளை இழந்து சித்தி பெறத் தவறியதால் குறித்த இளைஞன் மனமுடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது தாயாரின் கூற்றுப்படி, அவர் மூன்று குழந்தைகளில் மூத்தவர், குடும்பத்திற்கு உதவ முடியாமல் சோகத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Previous Post
Next Post
Related Posts

0 coment rios: